பூமிநாத சுவாமி கோயில்:

பூமிநாத சுவாமி கோயில்:
பூமிநாதசுவாமி கோயில் திருச்சுழியில் உள்ளது. பாண்டிய நாட்டின் புகழ் பெற்ற 14 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். விருதுநகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள கடவுள் பூமிநாதர், தாயார் துணைமாலை அம்மன். இந்த தலம் சைவ நாயன்மார் சுந்தரமூர்த்தி மற்றும் சேக்கிழாரால் பாடப்பெற்றதாகும். முத்துராமலிங்க சேதுபதியால் இந்த கோயில் புனரமைக்கப்பட்டு புதிய சன்னதிகள் அமைக்கப்பட்டன. குண்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்ட போது சுவாமி விவேகானந்தர் இந்த கோயிலில் 3 நாட்கள் தங்கியிருந்தார்.