அய்யனார் அருவி

அய்யனார் அருவி:

விருதுநகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அய்யனார் அருவி உள்ளது. காட்டுப்பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோயிலை ஒட்டி அருவி அமைந்துள்ளது. பதினைந்து அடி உயரத்தில் இருந்து அருவி விழுகிறது. இங்கு மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகளின் பசுமையை ரசித்தவாறே அருவியில் குளிப்பது அலாதியானது. விருதுநகர் மக்களின் முக்கிய சுற்றுலா தலமாக இது உள்ளது. ராஜபாளையத்தில் இருந்து காலை, மாலையில் பஸ் வசதி உள்ளது. இங்கு தங்குவதற்கு விடுதி வசதியோ, ஓட்டல்களோ இல்லை.