சஞ்சீவி மலை

சஞ்சீவி மலை

இராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் சஞ்சீவி மலை உள்ளது. இங்குள்ள அமைதியும் எழிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இராமாயணத்தில் இலங்கைப்போரின்போது மயங்கி விழுந்த இலக்குமணனைக் காப்பாற்ற அனுமன் இம்மலையைக் கொண்டு வந்ததாகவும் பின்னர் இங்கு வீசியெறிந்ததாகவும் உள்ளூர்க் கதைகள் கூறுகின்றன. ஆகவே இங்கு உயிர்காக்கும் மூலிகைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது